Annonser
- நன்றியுரை / 6 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம் |
![]() |
![]() |
![]() |
Written by நிர்வாகசபை. |
Sunday, 06 June 2010 20:55 |
அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானம் நன்றியுரை அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகர் ஆலயத்தின் 6 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம் 21.05.10 அன்று தொடங்கி இன்று 11 ம் நாளான பூங்காவானத்திருவிழாவினை நிறைவு செய்யூம் நேரத்தில் இந்த 11 நாட்கள் உற்சவத்தையூம் சிறப்பாக நடாத்த உதவிய அனைவரிற்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.
இவ்வருட அலங்கார உற்சவத்திற்கு உபயம் எடுத்தவார்கள் பொருளுதவிகள் செய்தவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது அன்னதானம் தயாரிக்க உதவிகள் செய்தவர்கள், அன்னதானத்திற்கு பொருளுதவிகள் வழங்கியவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வருட அலங்கார உற்சவத்தின் போதும் அதற்கு முன்பும் சரீர உதவிகள் செய்த அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது சிறப்பான தரமான கலைநிகழ்ச்சிகளை வழங்கிய சிறுவர்கள் அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை வழங்கிய பெரியவர்கள் கலைநிகழ்ச்சிகளின் போது ஒலி ஒளி அமைப்பு செய்ய உதவியவார்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அலங்கார உற்சவ செய்திகளையும் புகைப்படங்களையும் உடனுக்குடன் வெளியிட்ட இணையத்தளக் குழுவிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது ஆலயத்திற்கு வந்து அபிஷேகங்கள், பூஜைகளில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களிற்கும் மற்றும்; எல்லா வகைகளிலும் உதவிய அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வருட அலங்கார உற்சவத்தினை எமக்கு முன்பிருந்த நிர்வாகசபையும் தற்போதைய நிர்வாகசபையும் சேர்ந்து தான் நடத்துகினோம். முன்பிருந்த நிர்வாகசபை இட்ட அத்திவாரம் தான்
தற்போதைய நிர்வாகசபை அங்கத்துவர்கள் அனைவரும் தமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை பொறுப்புடனும் சரியான நேரத்திற்கும் இந்த நன்றியுரையில் யாரிற்காவது நாம் நன்றி கூற மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அலங்கார உற்சவம் மிகச் சிறப்பாக நடக்க உதவிய ஒத்துழைத்த அனைவரும் தொடார்ந்தும் உங்களது ஒத்துழைப்பையும் எல்லோரும் சந்தோஷமாக வந்து விநாயகப் பெருமானை தரிசித்து மனநின்மதியுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும். அப்படியான ஒரு சூழ்நிலை ஆலயத்தில் அமைய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம். நன்றி !!!
நிர்வாகசபை |
Last Updated on Tuesday, 13 December 2011 11:54 |
Siste nyhet
- Innkalling til generalforsamling 22-04-2018
- சிரமதானம் 29.03.2018 - 01.04.2018
- விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018
- விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018
- இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி
- மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை
- ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்
- அறிவித்தல்
- விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018
- விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017
Comments
+++thatsafunnypic.com+++